‘அட ராமா!’ ராமன் கோயில் பிரசாதத்தின் பெயரில் 6 லட்சம் பேரிடம் ரூ. 3.85 கோடி மோசடி

1 Min Read

புதுடில்லி, ஜூன் 6 அயோத்தி ராமர் கோயி​லில் பிராண பிர​திஷ்டை பிர​சாதம் எனக் கூறி 6 லட்​சம் பேரிடம் மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது.

ராமன் கோவில்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி​யில் ராமன் கோயில் ‘பிராண பிரதிஷ்டை’ செய்த பிறகு சுவாமி பிர​சாதம் கிடைக்​க​வில்லை என அயோத்தி காவல் நிலையங்களுக்குப் புகார்​கள் வரத் தொடங்​கின. அந்த புகார்​கள் மாநில சைபர் கிரைம் பிரி​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. சைபர் கிரைம் பிரிவு நடத்​திய விசா​ரணை​யில், போலி இணை​யதளம் உரு​வாக்​கி, ராமன் கோயில் பிர​சாதம் அனுப்​புவ​தாக விளம்​பரப்​படுத்​தப்​பட்​டது தெரியவந்​தது.

6 லட்சம் பேரிடம் மோசடி

காஜி​யா​பாத்தை சேர்ந்த ஆசிஷ் என்​பவர் இந்த மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளார். ராமன் கோயில் பிர​சாதம் பெற இந்​தி​யா​வில் ரூ.51 எனவும், வெளி​நாட்​ட​வர்​களுக்கு 11 டாலர் எனவும் கட்​ட​ணம் நிர்​ண​யித்​துள்​ளார். அந்​தவகை​யில், 3 கோடியே 85 லட்​சம் ரூபாயை, 6 லட்​சத்து 30,695 பக்​தர்​களிடம் ஏமாற்றி வசூல் செய்​துள்​ளார்.

நடவடிக்கை

இதையடுத்து சைபர் கிரைம் தடுப்பு காவல்துறையினர் அதிரடி​யாக செயல்​பட்டு ஆசிஷை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். அவரிடம் இருந்து கடவுச்சீட்டை பறி​முதல் செய்​தனர். தற்​போது அவரிடம் இருந்து 2 கோடியே 15 லட்​சத்து 8,426 ரூபாய் வசூல் செய்​யப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள ஒரு கோடியே 70 லட்​சத்து 47,313 ரூபாயை​யும் மீட்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

இணை​ய தளத்​தின்​
நம்​பகத்​தன்​மை​யை
சரி​பார்​க்​க…

இந்த வழக்கு உ.பி. சைபர் கிரைம் பிரிவு ஆய்​வாளர் முகமது அர்​ஷத் தலை​மை​யில் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. சைபர் கிரைம் குற்​றங்​களில் முதல் முறை​யாக ஏமாற்​றப்​பட்ட தொகையை மீட்​டுள்​ள​தாக காவல் துறை​யினர் கூறுகின்​றனர். தற்​போது அயோத்தி ராமன் கோயில் வளாகத்​தில், சன்னதி​களுக்​கும் பிராண பிர​திஷ்டை நடை​பெற்றுள்ளது. அதனால் போலி இணை​யதளங்​கள் பெரு​கும் அபா​யம் உள்​ள​தாக காவல்துறையினர் எச்​சரித்​துள்​ளனர். மேலும், பிர​சாதம் பெற நினைக்​கும்​ பக்​தர்​கள்​, இணை​ய தளத்​தின்​ நம்​பகத்​தன்​மை​யை சரி​பார்​க்​க அறி​வுறுத்தியுள்​ளனர்​.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *