புதுடில்லி, ஜூன் 4– டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீவிபத்து ஏற்பட்டபோது, பண மூட்டைகள் கட்டுக்கட்டாக எரிந்து நாசமானது. இதையடுத்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. உச்சநீதிமன்றம் நியமித்த குழு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கிடையே அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த யஷ்வந்த் வர்மா, பதவியிலிருந்து விலக செய்ய வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து அப்போது உச்சநீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜீவ் கன்னா, யஷ்வந்த் வர்மாவின் பதவி நீக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் அரசுத் தரப்பில் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.