வெளிநாடுகளை நம்பும் இந்திய நிறுவனங்கள்: ப.சிதம்பரம்

1 Min Read

இந்தியாவில் முதலீட்டு திட்டங்களை இந்திய நிறுவனங்களே கைவிடுவதாக ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய அறிவிப்புகளுடன் கைவிடப்பட்ட திட்டங்களின் விகிதம் 2024-2025-இல் 35.9 விழுக்காடாக ஆக உயர்ந்திருப்பதாகவும், அதேவேளையில் வெளிநாடுகளில் முதலீட்டை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய அரசு, கவனம் செலுத்த வேண்டும் என கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
ஆபரேஷன் சிந்தூரின் போது பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். பாக். தாக்குதலால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *