சென்னை, மே 26- தென்னிந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை மருத்துவர்களும், புகழ்பெற்ற பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வாணி விஜய் அவர்களும் இணைந்து, உட்புற மூல நோய்க்கான புதிய, குறைந்தபட்சஅறுவை சிகிச்சையான ‘ரஃபேலோ’ ரேடியோ அலை சிகிச்சையை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
நவீன சிகிச்சை
இந்த நவீன நடை முறை துல்லியமான செய்முறை, விரைவான குணமடைதல் மற்றும் குறைந்த அபாயத்துடன் கூடிய பகல்நேர சிகிச்சை யாகும். சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் வாணி விஜய் மற்றும் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகளின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு கூட்டாளர் வலையமைப்பின் தலைவரான ருபிந்தர் கவுர் ஆகியோர் இந்த சிகிச்சையை அறிமுகம் செய்து வைத்தனர்.
ரஃபேலோ செயல் முறையானது, 30 முதல் 60 வயதுடைய நோயாளிகள், குறிப்பாக இரத்தப்போக்கு, வலி அல்லது இறக்கம் போன்ற அறிகுறிகள் மற்றும் நீண்ட நேரம் அமர்ந்த நிலை வேலைசெய்பவர்கள், பிரசவத்திற்குப் பிந்தைய பெண்கள் ஆகியோருக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.
இது நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற, விரைவான, குறைந்த செயல்பாட்டு சிகிச்சையை வழங்குகிறது. சிகிச்சைக்கு பிறகு பெரும்பாலான நோயாளிகள் 24-48 மணி நேரத்தில் தங்கள் வேலைக்கு திரும்பி, இரண்டு நாட்களுக்குள் குறுகிய பயணத்தையும் மேற்கொள்ள முடியும். 3 வாரங்களுக்கு கடுமையான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டு தலுடன், குணமடைதல் சீராகவும் ஓய்வு நேரம் குறைவாகவும் இருக்கும் என டாக்டர் வாணி விஜய் தெரிவித்துள்ளார்.