சண்டை நிறுத்தம்: இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடக்கம்

1 Min Read

புதுடில்லி, மே 18 இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்கியது.

பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்குவதை முன்னிட்டு, நாட்டின் தேசிய ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார்.

பிறகு, தேசிய ஆலோசகர் அஜித் தோவலுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோ சனை நடத்தினார்.

இந்த நிலையில்தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இந்தியா சார்பில் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் ராய், பாகிஸ்தான் டிஜிஎம்ஓ காஷிஃப் அப்துல்லா பேச்சுவார்த்தை நடத்து கிறார்கள்

இந்த பேச்சுவார்த்தையில், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலி யுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *