24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

Viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை,ஜூன்28 – நிதி, மின் சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாநில மின் பகிர்ந்தளிப்பு மய்யத்தை நேற்று முன் தினம் (26.6.2023) ஆய்வு செய்தார். 

மேற்கண்ட ஆய்வின் போது, அமைச்சர் தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத் தின் அளவு பற்றி கேட்டறிந்தார்.

மேலும், மாநில மின் பகிர்ந் தளிப்பு மய்யத்தின் முக்கிய பணி களான மின் சுமை மற்றும் மின் உற்பத்தியை சமநிலை செய்து மின் விநியோகம் செய்தல், மாநில மின்கட்டமைப்பின் பாதுகப்பான திட்டமிடல் மற்றும் பொருளா தார செயல்பாடுகள், அதிர் வெண்ணை 49.90 பிக்ஷ் முதல் 50.05 பிக்ஷ் வரம்பிற்குள் பராமரித்தல், வில கல் வரம்பினை 200 மெகாவாட் வரம்பிற்குள் பராமரிப்பது உள் ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரத் தினை தடையின்றி வழங்குவதை கண்காணிப்பதற்கென பிரத்தியேக மாக இயங்கி வரும் (ஷிசிகிஞிகி) கட்டுப்பாட்டு மய்யத்தினையும் ஆய்வு மேற்கொண்டு, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் மின் தேவை குறித்து கேட் டறிந்தார்.

மேலும், மாநிலத்தின் தற்போ தைய மின்நுகர்வினை கருத்திற் கொண்டு எவ்வித தடங்கலுமின்றி அனைத்து மின் நுகர்வோர் களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கிட வும், பொதுமக்களிடமிருந்து பெறப் படும் புகார்களுக்கு துரிதமாக செயல் பட்டு மின் பழுதுகள் ஏற்படின் அவற்றை உடனுக்குடன் சரி செய்து சீரான மின்சாரத்தினை பாதுகாப்பான முறையில் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் வழங்கிட வும் நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *