சென்னை, மே 17 தொடக் கக் கல்வி பட்டயப் படிப் புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனு மதி வழங்கி அரசாணை வெளி யிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: தமிழ்நாட்டில் 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறு வனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு 1,740 இடங்கள் உள்ளன. இதேபோல், 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 25 தனி யார் ஆசிரியர் பயிற்சி நிறு வனங்களில் 1,500 இடங்களும் உள்ளன. இவற்றில் 2025-2026ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனு மதி கோரி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மய்ய இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.
அதையேற்று தொடக் கக் கல்வி பட்டயப் படிப் புக்கான மாணவர் சேர்க் கையை வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் ஜூன் 6ஆம் தேதிக்குள் பெற வேண்டும். அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 11ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மதிப்பெண், ஜாதி வாரியாக மாணவர்கள் ஜூன் 14-ஆம் தேதி தேர்வு செய்யப் படுவார்கள். அதன்பின் வகுப்புகள் ஜூன் 18ஆம் தேதி தொடங்கி நடைபெறும். அதைத் தொடர்ந்து மாணவர் களுக்கான கற்பித்தல் பயிற்சி கள் ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் நடத்தப்படும். பொதுத் தேர்வு மே மாதம் நடைபெறும். இது தவிர நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பூர்த்தியாகாமல் இருந்தால் அதை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களே உடனடி சேர்க்கை மூலம் நேரடியாக நிரப்பிக் கொள் ளலாம். அதேபோல், நடப் பாண்டு டிடெட் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பணிகள் முன் னெடுக்கப்பட்டுள்ளன. அதற்காக முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஒரு மாதம் முன்பாக ஜூனிலேயே நடத்தப்படும். அதற்கேற்ப கல்வியாண்டு ஜூன் முதல் மே மாதம் வரை மேற் கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.