தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மய்யம் ‘அறிவியல் ஒளி’ திங்களிதழ் ஆகியவற்றின் சார்பில் அறிவியல் ஒளி பதினெட்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழா மலரினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட அறிவியலறிஞர் சித்து முருகானந்தம், மருந்துவர் காந்தராஜ், இ.கி. இலெனின் தமிழ்க்கோவன் (தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மய்ய செயல் இயக்குநர் (மு.கூ.பொ.)) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். உடன்: ‘அறிவியல் ஒளி’ ஆசிரியர் நா.சு. சிதம்பரம். (சென்னை, 15.5.2025)