ஆவடி, மே 15- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயனின் தாய்மாமா பாலகிருஷ்ணன் (வயது 80) 12.05.2025 திங்கட்கிழமை இரவு காலமானார்.
செய்தி அறிந்து 13.05.2025 செவ்வாய்கிழமை மதியம் 03.00 மணிக்கு ஆவடி மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் ஜானகிராமன் தலைமையில் ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், திருமுல்லைவாயல் பகுதி தலைவர் இரணியன் ( எ ) அருள்தாஸ், ஆவடி மாவட்ட கழக துணைத் தலைவர் சி.வச்சிரவேல், பூவிருந்தவல்லி பகுதி கழக செயலாளர் மணிமாறன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் ஜெயராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.