மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் 12.5.2025 அன்று திருவள்ளூர் மாவட்டம், பூண்டி வட்டாரம், திருப்பாச்சூர், துணை சுகாதார நல வாழ்வு மய்யத்தில் ரூ.27 கோடி மதிப்பிலான சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் விரிவாக்கம் தொடக்க விழாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் குண மடைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சசிகாந்த்செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.