சென்னை, மே 13 சுதந்திர நாள் விழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமுக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு (ம) சான்று வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த சமூக சேவகர் விருது
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு சுதந்திர நாள் விழாவின் போது, சிறந்த சமுக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் 12.05.2025 முதல் தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிறந்த சமுக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள்:
* தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற் பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
* குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண் டும்.
இணையதளத்தில் விண்ணப்பித்த வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டியவை :
ஜூன் 12 கடைசி தேதி
* விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet – 4) தமிழ்-2, ஆங்கிலம்-2 புத் தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
* ஒரு பக்கம் தனி நபரை பற்றிய விவரம் – தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் (மின் நகல், காகித நகல்).
* இணைப்பு – படிவம் I & II, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். (மின் நகல், காகித நகல்)
எனவே, அனைத்து மாவட் டங்களிலும், பெண்களின் முன் னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனங்கள், இணையதளத்தின் மூலம் வருகின்ற 12.06.2025-க்குள் கருத்துருகளை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.