கடந்த 03.05.2025 அன்று மறைந்த தஞ்சை மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி செயலாளர் பூவை இராமசாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி பூவத்தூரில் 13.05.2025 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற உள்ளது.
அந்த நிகழ்ச்சிக்கு நமது கழக தோழர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு மறைந்த தோழரின் சமூக பணிக்கு அடையாளமாக அவரது உடல் மருத்துவ மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவ கல்லூரிக்கு உடற்கொடை வழங்கப்பட்டுள்ளதை போற்றி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தவருமாறு அனைவரையும் அழைக்கிறேன்.
நமது இராமசாமி அவர்கள் உரத்தநாடு வட்டாரத்தில் நன்கு அறிமுகமாகி தந்தை பெரியாரின் கொள்கை குன்றாக விளங்கியவர். அவர் எந்த நிலையிலும் கொள்கையில் சமரசம் செய்து கொண்டவர் இல்லை. அவர் தன்னுடைய சிறு வயதிலேயே கழக பணியில் ஈடுபட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் நின்றவர். தன்னுடைய வாழ்நாளில் பல கழக போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அந்த மாபெரும் தொண்டனின் படத்திறப்பு நிகழ்வில் கொள்கை உறவுகள் எல்லைகளை கடந்து கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
நேரில் வந்து அழைக்க இயலாத காரணத்தால் இதையே அழைப்பாக ஏற்று அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
– கு.அய்யாத்துரை நெடுவாக்கோட்டை, உரத்தநாடு