ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு சி.பி.அய்.மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிருப்தி

Viduthalai
2 Min Read

மதுரை, மே 2 ‘சி.பி.அய். மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வரு கின்றன. இதன் காரணமாக சிபிஅய் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்’ என உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் அதிருப்தி தெரிவித் துள்ளது.

மோசடி

நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் போலியான நபர்களுக்கு கடன் வழங்கி ரூ.2 கோடி வரை மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வங்கியின் தலைமை மேலாளர் உள்பட 13 பேர் மீது சென்னை சிபிஅய் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர்.

பொது மக்கள் நம்பிக்கை

இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஅய் நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு வங்கி தலைமை மேலாளர் பாலசுப்ரமணியன், சண்முகவேல், ராமலட்சுமி, செண்பகமூர்த்தி, அதிமுக மேனாள் அமைச்சர் அம்மமுத்து உள்ளிட்ட 8 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 8 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘‘சிபிஅய் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சில வழக்குகளில் காவல்துறை விசாரணை வேண்டாம் என, சிபிஅய் விசாரணை கோரி பாதிக் கப்பட்டோர் மனுத்தாக்கல் செய்கின் றனர். ஏனென்றால் சிபிஅய் எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் ஆளாகாமல் விசாரணை மேற்கொள்ளும் என பொதுமக்கள் நம்புகின்றனர். ஆனால், சிபிஅய் விசாரணையிலும் தவறு இருப்பது தெரிகிறது. சில வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை விடுவித்து விட்டு, சில நபர்கள் மீது சிபிஅய் வழக்குப் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

புகார்கள் அதிகரிப்பு

நிதி, பணமோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் அந்தத் தொகையை திருப்பி செலுத்தினாலும், அவர்களை சாட்சிகளாக சிபிஅய் சேர்த்து விடுகின்றனர். சிபிஅய் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன், காரணமாக சிபிஅய் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். சிபிஅய் விசாரணை அமைப்பானது யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கிறதா? சிபிஅய், பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு இந்த நீதிமன்றம் சில பரிந்துரைகளை செய்ய விரும்புகிறது.

கண்காணிக்க வேண்டும்

வழக்குகளில் குற்றவாளிகள் பெயர் சேர்ப்பது, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என அனைத்தையும் சிபிஅய் இயக்குநர் கண்காணிக்க வேண்டும். மேலும், அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை அதிகாரியையும் கண் காணிக்க வேண்டும்.

அதேபோல் சிபிஅய் விசாரணை அதிகாரிகள், தேவையான அனைத்து அறிவியல்பூர்வமான தொழில் நுட்பங் களையும் அறிந்திருக்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஅய் முறையாக விசாரிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே, 8 பேருக்கும் விசாரணை நீதி மன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது’’ என்று உத்தர விட்டார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *