சென்னை, ஏப்.29- தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டுக்கு பின்னரும் திராவிட ஆட்சியே தொடரும் என வைகோ தெரிவித்தார்.
வைகோ மரியாதை
சர்.பிட்டி. தியாகராயர் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத் திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட னர்.
தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
வலிமை வாய்ந்த இயக்கம்
திராவிட இயக்கத்துக்கு அடித்தளம் அமைத்தவர் சர். பிட்டி தியாகராயர். தமிழ்நாட்டில் நீதிக் கட்சி, திராவிட இயக்கம் உருவாக் கிய திட்டங்கள் இன்றளவும் வழி காட்டும் திட்டங்களாக இருக்கிறது. அதன் வழியில் நாட்டிற்கே வழி காட்டக்கூடிய நல்லாட்சி தரும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. இதனால் திராவிட இயக்கம் இந்தியாவிலேயே வலிமை வாய்ந்த இயக்கமாக உள்ளது. பல்வேறு வழிகாட்டுதலோடு பல புதிய திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து நல்வழியில் மகத்தான ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து கொண்டு வருகிறார். 2026-ஆம் ஆண்டுக்கு பின்னரும் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிதான் தொடரும். அதற்கு அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம். பஹல்காம் தாக்குதல் குறித்த நாடாளுமன்றம் சிறப்பு கூட்டத் தொடர் கூட்டவேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதற்கான வாய்ப்புகள் இருக்கும் என நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஓ.டி.டி. தளத்துக்கு மாறும் அரசு கேபிள் டிவி ஆய்வுப் பணிகள் தீவிரம்
சென்னை, ஏப்.29- தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஓ.டி.டி. தளத்திற்கு அரசு கேபிள் டி.வி சேவையை மாற்றுவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
டிஜிட்டல் கேபிள் சேவை
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 229 சேனல்கள் (147 இலவச சேனல்கள், 82 கட்டண சேனல்கள்) ரூ.140 மற்றும் ஜி.எஸ்.டி கட்டணத்துடன் பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் கேபிள் டி.வி. சேவை வழங்கப் படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு கேபிள் டி.வி. இணைப்புகளின் எண்ணிக்கை 36 லட்சமாக இருந்தது. அந்த எண் ணிக்கை, பிறகு 20 லட்சமாக குறைந்தது. தற்போது, அது மேலும் குறைந்து 14.12 லட்ச மாக இருக்கிறது. இதற்கிடையில், அரசு கேபிள் டி.வி. சந்தாதாரர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும், அதிநவீன தொழில்நுட்ப சேவைகளை வழங்கவும் உயர்தெளிவு (எச். டி.) செட்டாப் பாக்ஸ் பொருத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.அதன்படி, 50 லட்சம் சந்தாதாரர்கள் என்ற இலக்கை நிர்ணயித்து திட்டங்களை வகுத்து வருகிறது.
எச்.டி. செட்டாப் பாக்ஸ்
இலக்கை அடையும் வகையில், 50 லட்சம் உயர்தெளிவு செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில், 2 லட்சத்துக்கும் அதிகமான உயர்தெளிவு செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்து, அவை உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், பல புதிய சந்தாதாரர்களை ஈர்க்கவும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஊக்கம் அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி இணைப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததற்கு ஓ.டி.டி. தொழில்நுட்பம் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப தங்களையும் மேம்படுத்திக்கொள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.
ஓ.டி.டி.யில் கேபிள் சேவை
இந்தநிலையில், எச்.டி. செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் சேவை வழங்கும் திட்டம் ஒரு புறம் இருந் தாலும், மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப திட்டங்களை, ஆய்வுகளை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், ஸ்மார்ட் டி.வி., ஆண்ட்ராய்டு டி.வி., செல்பேசிகள் மூலம் கேபிள் டி.வி. சேனல்களை கண்டுகளிக்கும் வகையில், ஓ.டி.டி.தளத்தில் கேபிள் டி.வி. சேவையை அறிமுகம் செய்வது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இது போன்ற புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்து அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஆலோசித்து வருகிறது. ஓ.டி.டி. தொழில்நுட்ப வல்லுநர் களுடனும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அரசு கேபிள் டி.வி. நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வாழ விடுங்கள்: கெஞ்சும் பாக். பெண்!
இந்தியரை திருமணம் செய்து, 2 குழந்தைகளை பெற்று, 35 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் சாரதா பாய், தற்போது அவரது சொந்த நாடான PAK-கிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் நாடு திரும்ப ஒடிசா காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு தனக்கென யாரும் இல்லை எனவும், தயவுசெய்து குடும்பத்தையும், தன்னையும் பிரித்துவிட வேண்டாம் எனவும் அவர் கெஞ்சியபடி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.