புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு என முழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2025) காலை 10 மணியளவில், சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த புரட்சிக் கவிஞர் படத் திற்கு மலர் தூவியும் மரி யாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு, பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சி.வெற்றிச்செல்வி, அ.இளவேனில், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மு.பவானி, வி.தங்கமணி, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் வீரமுத்து, வழக்குரைஞர் துரை.அருண்,

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், ஈ.குமார், சண்முகப்பிரியன், பெரியார் யுவராஜ், ச.மகேந்திரன், பெரியார் இனியன்,

திருவொற்றியூர் மாவட் டத் தலைவர் எண்ணூர் மோகன், கொடுங்கையூர் சோ.தங்கமணி-தங்க.தனலட்சுமி, ஜெனார்த் தனன், தேனி யுகேஷ், பெரியார் மாணாக்கன், பூவை.மு.செல்வி மாணாக்கன், செ.பெ.தொண்டறம், மாணிக்கம், வை.கலையரசன், கரு.அண்ணாமலை, கே.என்.மகேஸ்வரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *