அகஸ்தியப் புரட்டு – ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாடு தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 29- “அகஸ்தியப் புரட்டு – ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாடு” எழுச்சி மாநாடாக நேற்று (28.4.2025) மாலை 7 மணிக்கு சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாநாட்டு வரவேற்புரையாற்றினார். இம்மாநாட்டிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

சிந்துவெளி ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர், மதிப்புறு முனைவர் ஆர்.பால கிருஷ்ணன் (அய்.ஏ.எஸ்.) பணி நிறைவு தொடக்கவுரையாற்றினார். பன்னாட்டு தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் நோக்கவு ரையாற்றினார். பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், பேராசிரியர் முனைவர் வீ.அரசு ஆகியோர் அகத்தியப் புரட்டுகளை ஆதாரங்களுடன் எடுத்துக்கூறி விளக்கவுரையாற்றினர்.

வெள்ளுடை வேந்தருக்கு மரியாதை

முன்னதாக, வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (28.4.2025) மாநாட்டு மேடையில் மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்த பி.தியாகராயர் படத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாநாட்டில் உரைப் பொழிந்த பேராசிரியர்களும் வள்ளல் பி.தியாகராயர் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

புத்தகம் வெளியீடு

மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஆர்.பாலகிருஷ்ணன், வா.மு.சேதுராமன், மறைமலை இலக்குவனார், வீ.அரசு மற்றும் வா.நேரு ஆகியோருக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து .நினைவுப் புத்தகம் வழங்கினார். மாநாட்டில் வெளி யிடப்பட்ட ‘அகத்தியர் ஓர் ஆராய்ச்சி’, ‘அகத்தியர் புரட்டு’ ஆகிய இரண்டு நூல்களைத் தமிழர் தலைவர் வெளியிட வருகையா ளர்கள் வரிசையில் வந்து அந்நூல்களை உரிய நன்கொடை கொடுத்துப் பெற்றுச் சென்றனர்.

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். நிறைவாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு நன்றியுரையாற்றினார்.

பங்கேற்றோர்

இம்மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், சட்டமன்ற காங்கிஸ் மேனாள் உறுப்பினர் உ.பலராமன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, புலவர் பா.வீரமணி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், தங்க.தனலட்சுமி, பேராசிரியர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் நம்சீனிவாசன், மும்பை குமணராசன், அம்பேத்கர் பேரவை திண்டிவனம் சிறீராமுலு, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்க டேசன், துணைத் தலைவர் வேல்.சோ. நெடுமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் மு.பாண்டு, தாம்பரம்  மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள், கழக இளைஞரணி, மகளிரணி, வழக்குரைஞரணி மற்றும் மாணவர் கழகத் தோழர்கள், தமிழுணர்வாளர்கள் திரளாக இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *