ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பரமேஸ்வரன் உடல்நலம் குறித்து அவரது மனைவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு மூலம் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கைக்கு பரமேஸ்வரனின் மனைவி மருத்துவர் நயன்தாரா நன்றி தெரிவித்துக் கொண்டார்.