கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திறப்பு

1 Min Read

சென்னை, ஏப்.24- பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்று, விடைத்தாள் திருத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 13 ஆம் தேதியும், 4 மற்றும் 5 ஆம் வகுப்புக்கு கடந்த 17 ஆம் தேதியும் தேர்வு நடந்து முடிந்தது.

தேர்வு முடிந்த மாணவ- மாணவிகளுக்கு கோடை விடு முறை அதற்கு மறுநாளில் இருந்து விடப்பட்டது. மீதமுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு இன்றுடன் (24.4.2025) ஆண்டு இறுதித் தேர்வு நிறைவு பெற இருக்கிறது. இவர்களுக்கு நாளை (25.4.2025) முதல் கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் இருந்து வருகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் நேற்று (23.4.2025) வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு 25 ஆம் தேதி (நாளை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டில் (2025-2026) ஜூன் 2 ஆம் தேதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *