அண்ணல் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்

1 Min Read

பயர்நத்தம், ஏப். 23- அரூர் கழக மாவட்டம் பயர்நத்தம்  கிராமத்தில் 20.4.025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் பொன்.அய்யனார் தலைமையில் அண்ணல் அம்பேத்கர், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு பயர்நத்தம் பேருந்து நிலையத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர்  தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேஷ், திமுக நிர்வாகி இரா. சேட்டு, ஆகியோர் முன்னிலை ஏற்றனர். கழக சொற்பொழிவாளர் மழவை  சு. பெ.தமிழமுதன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாணவர் கழக தோழர்கள் அரிகரன், அ.பிரதாப், சஞ்சீவன், தருமபுரி கண் ராமச்சந்திரன், திமுக நரேஷ் வர்மா, மணிகண்டன், சின்னசாமி, பொன்னுசாமி, புனிதா, பெரியார் துவாரகா, ஆகியோர் கலந்து கொண்டனர் கழகத் தோழர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *