எண்ணூர் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள் விழா

viduthalai
1 Min Read

எர்ணாவூர், ஏப். 23- அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்தநாளையொட்டி எண்ணூர் கழகம் சார்பில் 21.4.2025 அன்று மாலை 6 மணிக்கு எர்ணாவூர் -லிப்ட் கேட் பாரத் நகரில் தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது.

கழகத் தோழர் தமிழ்மாறன் தொடக்க உரையாற்றினார். சிவபெருமான் (விசிக) வரவேற்புரை ஆற்ற, பாரத் நகர் குடியிருப்பு நல சங்கத்தின் செயலாளர் சா.கிருஷ் ணன் தலைமையுரையாற்றினார்.

விசிகவைச் சேர்ந்த உலக முதல்வன் அண்ணல் அம்பேத்கரை பற்றி ஒரு பாடல் பாடினார். தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தின் நிறுவனர் சிவப்பிரகாசம் அண்ணல் அம்பேத்கர் எழுதிய ஜாத்பட் தோடக் மண்டல் (தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தின் வெளியீடு) என்ற நூலைப் பற்றி பேசினார்.

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றினர். நிறைவாக கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயத் தைப் பற்றியும், அதற்காக இப்பெரும் தலைவர்கள் பட்ட பாடு பற்றியும், திராவிட இயக்கத்தின் தேவை பற்றியும், பாசிச, பாஜக, ஆர் எஸ் எஸ் ,பார்ப்பன நச்சுக் கொள்கை தமிழ்நாட்டை எவ்வாறு பாதிக்கிறது, இந்தப் பார்ப்பனிய கும்பலை தமிழ்நாட்டு மக்கள் அடியோடு ஏன் புறக்கணிக்க வேண்டும் என்றும் விரிவாக நிறைவுறையாற்றினார்.

இந்நிகழ்வில் அம்பேத்கர் சிறுத் தைகள், விடியல் களம், புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் தமிழகம் கட்சி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், ஜனநாயக தொழிற்சங்க மய்யம், மற்றும் அருகாமையில் உள்ள கிராம நிர்வாகத்தினர், மார்க்சிஸ்ட் இயக்க, பகுத்தறிவாளர் கழகம் ஆகிய அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *