“பெரியாரும் டி.எம். சவுந்தரராசனும்”

1 Min Read

வணக்கம் அய்யா, இன்று பெரியார் ஓடிடியில், மகிழ் மீடியா வழங்கிய “பெரியாரும் டி.எம். சவுந்தரராசனும்” எனும் தலைப்பிலான அரசியல் கலை இலக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு கேட்டு மகிழ்ந்தேன்.
150 தொடர்களாக திடலிலே காட்சிப்படுத்தி வெளியிட்டதையும், பட்டினத்தார் ஆலயத்தில் பணம் கட்டி காட்சியாக எடுத்தது, பெரியார் திடலில் எந்த விதமான கட்டணமோ கெடுபிடியோ இல்லாமல் அனுமதிக்கப்பட்ட தகவல், ஆசிரியர் அய்யா அவர்களே ஆச்சரியப்படும் வகையில், நாத்திகப் பாடல் தொகுப்புகளை வழங்கியது.
“உங்களில் நான் ஒருவன், உதவும் மனம் கொண்ட நண்பன்” என்ற பாடலில், “பெரியார்க்கு இருக்கும் அறிவுரை எல்லாம் சிறியார்க்கு இல்லையடா” என்ற வரியை பெரியார் குரலிலேயே பாடிய தகவல்களை கேட்டு ஆச்சரியத்தில் திகைத்து நிற்கிறேன்.
செவ்வி எடுத்து பதிவிட்ட பெரியார் ஓடிடி நுட்பமான கலைஞர்களுக்கு வாழ்த்தும், பாராட்டுகளும் உரித்தாகுக!

– ஆ வேல்சாமி, மேற்பனைக்காடு கிழக்கு

தமிழ்நாடு

Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *