டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி
சென்னை, ஏப்.14- ஹலோ எப்.எம்.மில் வாரந்தோ றும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நேயர்களின் ஏகோபித்த வரவேற்போடு ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
இதில் அரசியல் பிரபலங் கள் பங்கு பெற்று இன்றைய அரசியல் நிகழ்வுகள், சமூக நோக்கங்கள் குறித்து நிகழ்ச்சிதொகுப்பாளருடன் விவாதித்து வருகின்றனர். அந்தவகையில் ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் தி.மு.க. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி இடம் பெற்றது. அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:
தமிழ்நாடு பா.ஜனதா புதிய மாநில தலைவராக தேர்வு செய்யப்பட் டுள்ள நயினார் நாகேந்திரன் தமிழ் நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண் டிய நிதியை பெற்றுத்தருவாரா?
பா.ஜனதா தலைமை மாற்றமும் அ.தி.மு.க.வுடனான கூட்டணியும் தாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான். இந்த கூட்டணியால் தி.மு.க. கூட்டணியை அசைக்கக் கூட முடியாது.
2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்றதேர்தல் ஆகியவற்றில் இதே கூட்டணிதான் இருந்தது. இருப்பினும் தி.மு.க.வையும், அதன் தோழமைக் கட்சிகளையும் தான் மக்கள் ஆதரித்தார்கள். அதனால் இப்போது மீண்டும் இணைந்துள்ள அ.தி.மு.க.-பா ஜனதாவால் தி.மு.க. அரசு அமைவதை தடுக்க முடியாது.
அமைச்சர் பொன்முடியின் பேச்சை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் தலைமை அவருக்கு தண்டனை அளிக்கும் விதமாகவே அவரது கட்சிப் பதவியை பறித்துள்ளது. திருக்குறளை தாண்டி தமிழில் உள்ள இலக்கியங்கள் குறித்தோ அல்லது முச்சங்கங்கள் குறித்தோ அவர்களுக்கு (பா.ஜனதா) ஏதேனும் தெரியுமா?. தொல்காப்பியத் துக்கு உரை எழுதியவர் எங்கள் தலைவர் கலைஞர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள சலசலப்பு, ஆளுநர் நியமித்த துணைவேந்தர்கள் மீதான நடவடிக்கை, ‘டாஸ்மாக்’ வழக்கு உள்ளிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரின் விறுவிறுப்பான கேள்விகளுக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கமாக பதிலளித்துள்ளார்.