சென்னை, ஏப். 13- முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் அறிவித்துள்ள கோடை கால பயிற்சி முகாம்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றில் பங்கேற்க செய்யுமாறு கல்லூரி முதலமைச்சர்களுக்கு மாநில உயர்கல்வி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில உயர்கல்லி கவுன்சில் துணைத் தலைவர் எம்.பி.விஜயகுமார் கல்லூரி கல்வித் துறை வழியாக அனைத்து கலை அறி வியல் கல்லூரிகளில் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
தேசிய அளவில் முக்கியத் துவம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் பிஎஸ்சி, எம்.எஸ்சி மாணவர்களுக்கு கோடைகால இன்டர்ன்ஷிப் பயிற்சி முகாமை அறிவித்துள்ளன. புகழ்பெற்ற ஆராய்ச்சி மய்யங்களில் குறுகிய கால ஆய்வுப் பணியில் ஈடு படுவதற்கு இது அருமையான வாய்ப்பு ஆகும்.
ஆராய்ச்சியாளர் கள் மற்றும் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலின்படி ஆய்வு மேற் கொள்ள கோடைகால பயிற்சி முகாம்கள் நல்ல தளமாக அமையும் நவீன ஆய்வகங்களை நேரில் பார்வையிடலாம். அங் குள்ள விஞ்ஞானிகளுடன் கலந் துரையாடலாம்.
இதன்மூலம் மாணவர்கள் பல் வேறு துறைகளில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி பணிகளை நேரில் அறிந்துகொள்ள முடியும். பாபா அணு ஆராய்ச்சி மய்யம், தேசிய வேதியியல் ஆய்வகம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், சென்னை கணிதவியல் நிறுவனம், இந்திய கணிதவியல் நிறுவனம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறு வனம், இஸ்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கும் கோடை கால பயிற்சி முகாம்கள் தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்குமாறும் அவை தொடர்பான அறிவிப்புகளை அறிவிப்பு பலகையில் வெளியிடுமாறும் கல்லூரி முதல்வர்களும், துறைகளின் தலைவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிஜேபியுடன் அ.தி.மு.க. கூட்டணியா?
அ.தி.மு.க.விலிருந்து மேனாள் எம்எல்ஏ விலகல்
புதுவை, ஏப்.13- பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் மேனாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசனா அக்கட்சியில் இருந்து விலகினார். இவர், காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதியில் 1995ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தார். இடையில் தே.மு.தி.க.வில் இணைந்தார். சில காலம் கடந்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
மறைந்த மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அப்போது அசனா வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மாவட்ட துணை செயலாளராக இருந்து வந்த நிலையில் திடீரென – அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் அசனா கூறுகையில், ‘கடந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து தோல்வி அடைந்தோம். இனி பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். ஆனால் தற்போது பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதி செய்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே, அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன்’ என்றார்.