கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.4.2025

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை
* நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* காந்தியத்திற்கும், கோட்சே கும்பலுக்கும் இடையே நடக்கும் போட்டி; தெலங்கானாவில் பாஜக கால் பதிக்க விட மாட்டோம், முதலமைச்சர் ரேவந்த் உறுதி.
* மகாராட்டிரா மாநில தேர்தலில் மோசடி நடந்துள்ளது; மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும், காங்கிரஸ் செயற்குழுவில் மல்லிகார்ஜூனா கார்கே முழக்கம்.
* தெலங்கானாவில் ஜாதி கணக்கெடுப்பு மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது புரட்சிகர முடிவு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்துக்கு ராகுல் பாராட்டு.
* சீனா மீது 125 சதவீத வரி விதித்தார் டிரம்ப். பிற நாடுகளுக்கு வரியில் சிறு சலுகை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்; ஜாதி அரசியல்தான் கூடாது என்கிறார் ஒன்றிய அமைச்சரும் எல்ஜேபி (ஆர்வி) தலைவருமான சிராஜ் பஸ்வான்.
* ‘பொருளாதார புயல் வருகிறது, பிரதமர் மோடி எங்கே’ என ராகுல் காந்தி கேள்வி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஜோதிராவ் புலே பற்றிய திரைப்படத்தில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஜாதி பெயர்களை நீக்கிட பார்ப்பன சங்கம் அழுத்தம்; நீக்கிட தணிக்கை வாரியல் வலியுறுத்தல்.
தி இந்து
* உ.பி. முசாபர்நகர் இஸ்லாமியர்கள் 300 பேருக்கு தாக்கீது; வக்பு சட்டத்தை எதிர்த்து கருப்புப் பட்டை அணிந்திருந்தார்களாம். வக்பு (திருத்த) சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது கருப்பு கைப்பட்டை அணிந்ததற்காக தலா ரூ.2 லட்சம் பிணைத் தொகையை வழங்குமாறு ஆணை.
* ஆளுநர் அதிகாரம் குறித்த தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, ஆறு புதிய மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற முடியும் என கேரள அரசு நம்பிக்கை.
* ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்த பின்னணியில், கருநாடக அமைச்சரவை விவாதித்து ஆளுநர் தவார்சந்த் கெலாட் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து விரைவில் முடிவு.
* தமிழ்நாடு ஆளுநரால் தடுத்து நிறுத்தப்பட்ட மசோதாக்களை “செயல்படுத்த” உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, நரேந்திர மோடி அரசாங்கத்தின் முகத்தில் விழுந்த “அறை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *