சட்டமன்றத்தின் அதிகாரங்களை கைப்பற்ற நினைக்கும் ஆளுநர்களுக்கு எதிரான நடவடிக்கை
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
திருவனந்தபுரம், ஏப்.10 தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பதிவில் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த வழக்கில் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதை வரவேற்கிறேன். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கும், சட்டமன் றத்தின் ஜனநாயக உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதாக உள்ளது.
ஆளுநர்கள் அமைச்சரவையின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்ெகனவே வலியுறுத்தி உள்ளது. தற்போது இந்த தீர்ப்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வதிலும் கட்டுப்பாடு விதித்து இருப்பதை அறிய முடிகிறது.
“சட்டமன்றத்தின் அதிகாரங்களை கைப்பற்ற நினைக்கும் ஆளுநர்களுக்கு எதிரான எச்சரிக்கை தான் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.
கேரளாவில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்கள் தீர்வுகாணப்படா மல் கடந்த 23 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கேரள அரசும் வழக்கு தொடர்ந்து உள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கேரளாவுக்கும் சாதகமாகும்.