தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை ஓசூர் பகுதியில் அமைக்க கோரிக்கை!

viduthalai
1 Min Read

ஒசூர், ஏப். 8- ஒசூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி 06.04.2025 மாலை துவக்க மாநாடு அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது

இந்த மாநாட்டில் பொதுச்செயலாளர் சுந்தரம், பொருளாளர் குமணன், துணைத்தலைவர்கள் பாலா, செல்வராஜ்,மாதேசன்,வனமூர்தி, துணைச்செயலாளர்கள் ரகுவரன், வேளாங்கண்ணி, அரிஷ்குமார்,ராமன், தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் ரூபன் ஆகியோர் மாநாட்டு நோக்கம் குறித்து உரையாற்றினர்.
ஆளுகின்ற அரசுகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலும், குறிப்பிட்ட கால அளவு வேலை முறை,NAPS முறைகளை ஒழித்து அனைவருக்கும் நிரந்தர வேலையை வழங்கு!
தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக இயற்றப்பட்ட இருக்கும் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடு!

வேலை நீக்க தடைச் சட்டத்தை உடனடியாக நிறை வேற்று!

தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை ஒசூர் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடு!
தேங்கி கிடக்கும் தொழி லாளர் வழக்குகளுக்கு உடன டியாக தீர்வை வழங்கி அதனை நடைமுறைபடுத்து!போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இம் மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தொழிற்சங்கம் சார்பில் ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு வளர்ச்சி நிதியாக ரூ3000த்தை கழக மாவட்ட தலை வர் சு.வனவேந்தன் தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் குமணன் ஆகியோரிடம் வழங்கி னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *