பாளையங்கோட்டை, ஏப். 7- தூத்துக்குடி மாவட்ட ப.க. தலைவர் வெங்கட்ராமன்-பேச்சி யம்மாள்ஆகியோரின் மகள் யாழினி-தாமோதரன் இணையேற்பு விழா 4.4.2025அன்று பாளையங்கோட்டை இதயா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட கழக தலைவர் ச.இராசேந்திரன் வரவேற்று உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலி வழி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை தலைமையேற்று வாழ்த்துரை வழங்கி மணவிழாவை நடத்தி வைத்தார்.
மாவட்ட கழக காப்பாளர் சிவகளை மா.பால்இராசேந்திரம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி, மும்பை ப.க.தலைவர் இரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்தலைவர் .மு.சுப்ரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தூத்துக்குடிமாவட்டத் தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட துணைத்தலைவர் ந.மகேசு, மாவட்ட துணைச்செயலாளர் மாரி.கணேசு, மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன், மாவட்ட ப.க.துணைத்தலைவர் சந்திப்பு நடராசன், மாநகர செயலாளர் வெயிலுமுத்து, தச்சை பகுதி தலைவர் இரா.கருணாநிதி,
தென்கலம் தலைவர் அய்யப்பன், செயலாளர் வெள்ளத்துரை, சேரன்மகாதேவி, ஒன்றியத் தலைவர் கோ.செல்வசுந்தரசேகர், பொதுக்குழு உறுப்பினர் கீழப்பாவூர் அய்.இராமச்சந்திரன், தூத்துக்குடி இரா.ஆழ்வார், பாலசுப்ரமணியன், வழக்கு ரைஞர் பா.இராசேந்திரன், மகளிரணி பொறுப்பாளர்கள் இரா.பானுமதி, வே.முத்துலெட்சுமி, மு.சந்திரா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
மாவட்ட ப.க.தலைவர் ச.வெங்கட் ராமன் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.