அமெரிக்க வரி விதிப்பு எதிர்வினையாற்றும்முன் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை – காங்கிரஸ் வலியுறுத்தல்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப்.6- அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் முன் அரசியல் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினருடன் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் எந்த முடிவாயினும் அதில் தேச நலன்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 27 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெ ரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இடையூறு

இந்நிலையில், புது டில்லியில் செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆனந்த் சா்மா கூறியதாவது: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ள இந்தப் புதிய பரஸ்பர விதி நடவடிக்கை கெட்டவாய்ப்பானது மற்றும் உலக வா்த்தகத்துக்கு ஒரு பெரிய அடியாகும். மேலும், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும்.

அமெரிக்க அதிபா் டிரம்ப் பின் இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கை, உலக வா்த்தகத் தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இடையூறுகளை உருவாக்கியுள்ளது. இது பெரிய அல்லது சிறிய, பணக்கார மற்றும் வளா்ந்த நாடுகள் அல்லது வளரும் அல்லது ஏழை நாடுகள் என அனைத்து பொருளாதாரங்களிலும் ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அதிபா் டிரம்ப்பின் முடிவு பலதரப்பு வா்த்தக அமைப்பை தலைகீழாக மாற்றியுள்ளது. இம்முடிவு எந்த நாட்டுக்கும் நன்மை பயக்காது. இது அமெரிக்க நலன்களையும் பாதிக்கும். மேலும், அனைத்து பன்னாட்டு ஒப்பந்தங்கள், விதிகள் மற்றும் கொள்கைகளை மீறுவதாகும்.
இந்த வரி விதிப்புக்கு எதிர்வினையாக இந்தியா சார்பில் எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது, அதில் தேச நலன்கள் முதன்மையாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், அது விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஒருமித்த முடிவு

இவ்விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவு ஒருமித்த கருத்தாக இருக்க வேண்டும்; அவசரமாக எடுக்கப்படக் கூடாது. ஏனெனில், நாடு அதன் விளைவுகளை சந்திக்க முடியாது.

நாடாளுமன்ற அமா்வில் இந்த பிரச்சினை குறித்து அரசு விவாதித்திருக்க வேண்டும். இப்போதும் அனைத்து அரசியல் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினருடன் கலந்து பேசி ஒன்றிய அரசு ஒருமித்த முடி வெடுக்க வேண்டும்.

இந்தியா ஏற்கக் கூடாது

சேவைத் துறையை மய்யமாக வைத்து எந்த வா்த்தக ஒப்பந்தத்தையும் இந்தியா ஏற்கக் கூடாது. அது நாட்டின் நலனைப் பாதிக்கும். வா்த்தக ஒப்பந்தங்களில் டிரம்புக்கு அதிகாரம் இல்லை. எனவே, அவா் எந்த சலுகைகளையும் வழங்க முடியாது. ஆனால், மேலும் வரிகளை விதிக்க முடியும் என்பதையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும்

முன்னுரிமை

இப்பிரச்சினையை கையாள்வதற்கும் வா்த்தகத்தின் போக்கைக் கண்காணிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க பன்னாட்டு வா்த்தகத்தில் அனுபவம் உள்ள நிபுணா்களைக் கொண்ட ஒரு தேசிய பணிக் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

வளைகுடா நாடுகளில்

அய்ரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகியவற்றுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங் களுக்காக நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆப்பிரிக்க, தென் அமெரிக்க மற்றும் வளைகுடா நாடுகளில் வா்த்தகத்தை மீண்டும் எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து இப்போது நாம் கூடுதல் தீவிரத்துடன் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *