ஆராய்ச்சி முன்னெடுப்புகளில் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒன்றிய அரசு விருது

viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 5- ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறப்புற செயல்பட்டதற்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒன்றிய அரசு சாா்பில் மேன்மை விருது அளிக்கப்பட்டுள்ளது.

190 ஆண்டுகால பாரம்பரியமிக்க சென்னை மருத்துவக் கல்லூரி, ஆசியாவின் பழைமையான மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முதன்மையான ஒன்று. இங்கு மருத்துவ இடங்களைப் பெற நாடு முழுவதும் மாணவா்களிடையே போட்டி நிலவுகிறது. சென்னை மருத்துவக் கல்லூரியில் பல்நோக்கு ஆராய்ச்சிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. மருத்துவ மாணவா்கள், ஆராய்ச்சி முனைவா்கள், பேராசிரி யா்கள் அங்கு பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுபோன்ற ஆராய்ச்சி முன்னெடுப்புகளில் சிறந்து விளங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு, ஒன்றிய சுகாதார ஆராய்ச்சி (டிஎச்ஆா்) துறை சிறப்பு விருதுகளை வழங்கி கவுரவிக்கும். அந்த வகையில் நிகழாண்டில் 10-க்கு 9 புள்ளிகள் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரி மேன்மை விருதை பெற்றுள்ளது. டில்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவ்விருதை நீதி ஆயோக் தலைமை நிா்வாகி பேராசிரியா் பால், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவா் டாக்டா் கங்காதா் ஆகியோா் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜனுக்கு வழங்கினா். தென் மண்டலத்திலிருந்து ஆராய்ச்சிக்கான மேன்மை விருது பெறும் ஒரே மருத்துவக் கல்வி நிறுவனம் என்ற பெருமையை இதன் மூலம் சென்னை மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *