தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (4.4.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, திருச்சியில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள நூலகத்திற்கு “பெருந்தலைவர் காமராசர்” பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.