வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு

viduthalai
2 Min Read

தமிழ்நாடு அரசு, கோடை கால வெப்ப அலைகளை எதிர்கொள்ளவும், அதன் தாக்கங்களை குறைக்கவும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை 2023 மற்றும் சமீபத்திய அரசு அறிவிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு

தமிழ்நாடு அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து, இதற்கு தேவையான நிதி மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2024 ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடப் பட்ட அரசாணைகளின்படி, வெப்ப அலையால் உயிரிழப் பவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை காலத்தால் செய்யப்பட்ட அரசாணையாகும், அதாவது அவசரகால நடவடிக்கை ஆகும்.

தண்ணீர் பந்தல்கள் மற்றும் குடிநீர் வழங்கல்

கோடை காலத்தில் வெப்பத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 10 இடங்களில் சாலையோர தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பந்தல்களில் தண்ணீர், மோர், தர்பூசணி, உள்ளிட்ட நீர்சத்துள்ள பழங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை 2025 மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, கோடை காலம் முழுவதும் தொடரும்.
மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து குடிநீர் வழங்குவதற்கும், ORS (ஓரல் ரீஹைட்ரேஷன் சால்ட்ஸ்) கரைசல் விநியோகிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ வசதிகள் மற்றும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெப்ப அலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை சமாளிக்க, மருத்துவ முகாம்கள் மற்றும் முதலுதவி மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் டெஹைட்ரேஷன், வெப்ப அடி (heat stroke) போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, வெப்ப அலையை எதிர்கொள்ளும் முறைகள், உடல் நலத்தை பாதுகாப்பது, மற்றும் வெப்பத்திலிருந்து தங்களை காக்கும் வழிமுறைகள் பற்றிய பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.

வானிலை முன்னெச்சரிக்கை
மற்றும் கண்காணிப்பு

தமிழ்நாடு வானிலை மய்யம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு, வெப்ப அலையை முன்கூட்டியே கண்காணித்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் வழங்குகின்றன. அறிவிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் தினமும் வானிலை மற்றும் வெப்ப நிலை பற்றிய தகவல்கள் பகிரப்படுகின்றன.
டோப்பிளர் ரேடார் கண்காணிப்பு மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் மூலம் வெப்ப அலையின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *