புதுச்சேரி இலக்கிய சோலை தமிழ் மன்ற 82ஆம் நிகழ்வு 30-03-2025 காலை புதுவை அரசு ஊழியர் சம்மேளன அரங்கில் நடைபெற்றது. கவிஞர் குமரவேலு அனைவரையும் வரவேற்றார். கவிஞர் வடுகை கண்ணன் தலைமையுரை ஆற்றினார். “திருக்குறள் தெளிவோம்” பற்றி கவிஞர் பத்மநாபன் உரையாற்றினார். பெண்களின் இன்றைய நிலை பற்றி பேராசிரியர் அவ்வை நிர்மலா சிறப்புரை ஆற்றினார். படைப்பாளி பைரவி தலைமையில் 30 கவிஞர்கள் “மங்கையரை போற்றுவோம்” என்ற தலைப்பில் கவிதைகளை வாசித்தார்கள். நிகழ்ச்சி முடிவில் கவிஞர் காசி முனியன் தொகுப்புரை ஆற்றினார்.