தி.மு.க. வேட்டியை கட்டும் போது பொட்டு வைக்காதீர்கள்!

viduthalai
1 Min Read

சாமி கும்பிடுங்க..வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், திமுக வேட்டிய கட்டும் போது பொட்டு வைக்காதீங்க என்று ஆ.ராசா பேசிய காட்சிப் பதிவு வைரலாகிறது. நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது ‘யார் சங்கி, யார் திமுகவைச் சேர்ந்தவர் என்ற வித்தியாசம் தெரியாது. அதனால் தான் சொல்றேன், சாமி கும்பிடுங்க. அப்பா, அம்மா விபூதி பூசும்போது வைத்துக்கொள்ளுங்க. ஆனால், திமுக வேட்டி கட்டிய பிறகு, எல்லாத்தையும் அழித்துவிட்டுங்க என்றார்.

மும்பையில் மராத்தி பேச மறுத்தால் இதுதான் கதி!

ஹிந்தி எதிர்ப்பு கொதி நிலையை அடைந்துள்ளதற்கு மகாராட்டிரா மாநிலம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. மும்பையில் மராத்தி பேச மறுப்பவர்களை, நவநிர்மான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடி பொளக்கின்றனர். இதுதொடர்பான காட்சிப் பதிவுகள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வேலை செய்ய வந்த மாநில மொழியை கற்க வேண்டும் என ஒரு தரப்பினரும், வன்முறையில் இறங்கக் கூடாது என மற்றொரு தரப்பினரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *