திருவண்ணாமலை, மார்ச் 31 நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் விசிக தோ்தல் அங்கீகார வெற்றி விழா 29.3.2025 அன்று இரவு நடைபெற்றது.
கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது: திமுக கூட்டணியை உடைக்க சிலா் முயற்சித்து வருகின்றனா். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அப்படி காலூன்றினால், முதலில் அதிமுகவைத்தான் பலவீனப்படுத்த நினைக்கும். தவறியும்கூட பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது.
வலுவான சக்தி
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்றெல்லாம் யூகத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கிறார்கள். 6 தொகுதி 10 தொகுதி ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை. மாறாக, நாங்கள் இருக்கும் கூட்டணி தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்பதை வரும் தோ்தலில் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்றார் அவா்.
முன்னதாக, புத்தா், அம்பேத்கா், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் படங்களுக்கு தொல்.திருமாவளவன் மற்றும் விசிக மூத்த நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
திகார் சிறை அவலம்
5,200 கைதிகளை அடைக்கக்கூடிய சிறையில் 13,183 பேர் அடைப்பு
புதுடில்லி, மார்ச் 31 டில்லியில் அமைந்துள்ள திகார் சிறைச்சாலை உலகின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாகும். திகாரில் 5,200 கைதிகளை அடைக்கக்கூடிய திறன் உள்ளது, ஆனால் தற்போது திகாரில் உள்ள சிறை வளாகங்களில் 13,183 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திகார் சிறையில் நிரம்பி வழியும் கைதிகள் கூட்ட நெரிசலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செயப்பட்டுள்ளது.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
திகார் சிறை வளாகத்தில் உள்ள நபர்கள் 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய மற்றும் முதல் முறையாக குற்றவாளிகளாக இருந்தால், அவர்களை ஜாமீனில் விடுவிக்க தகுதிகாண் அறிக்கையை பரிசீலிக்க வேண்டும்.
2004இல் ரோகினியில் கட்டப்பட்ட சிறை வளாகம் மற்றும் 2016இல் மண்டோலியில் கட்டப்பட்ட சிறை வளாகம், திகார் சிறைச்சாலையில் நிரம்பி வழியும் கைதிகள் கூட்டத்தை குறைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அங்கும் இந்த அவல நிலையே தொடருகிறது.
தேவையற்ற கைதுகளால் சிறை வளாகத்தில் நெரிசல் ஏற்படுகிறது.இந்த சிறை வளாகத்தின் நெரிசல் காரணமாக, கைதிகளுக்கு ஏற்படும் மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளின் விளைவாக அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.