அரசு சுகாதார மய்யத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட பச்சிளம் குழந்தை, தனியார் மருத்துவமனையில் உயிர்பிழைத்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகதூர் பைதா – ஜோதி குமாரி இணையருக்கு பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாக அரசு மருத்துவர் கூறியுள்ளார். பின்னர், தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் செலுத்தியபோது குழந்தை அழுது அசையத் தொடங்கியது. இதனால், பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.