‘வாகை சூட வாரீர்’ மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் சத்தியமங்கலத்தில் இன்று (29.3.2025) மாலை வரை நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வை பெரியார் மணியம்மை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்துப் பேசினார்.
மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன், ஆனைக்கொம்பு சீறிராம், நம்பியூர் காமராஜ், கல்வி நிறுவனங்களின் தாளாளர் என்.கே. ஜவகர், செயலாளர் சுமதி, வெற்றி இன்ஸ்ட்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் சிறீதர், சமூக ஆர்வலர் பொன்னுசாமி, ரீடு நிறுவன திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, பியூ ஈஸி அகாடமி செ. சண்முகசுந்தரம், கூடக்கரை கே.பி. சண்முகசுந்தரம், பெரியார் பெருந்தொண்டர் ராஜமாணிக்கம், மாவட்ட காப்பாளர்
ந. சிவலிங்கம், த. சிவபாரதி, த. சூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.