உலக நாத்திகர் நாள் (மார்ச் 23)

2 Min Read

காலம் காலமாகக் கடவுள் என்னும் பெயரால் மக்களை ஏமாற்றி வந்த புரட்டுக் கும்பல்களைத் தங்கள் பகுத்தறிவால், கேள்விகளால் அம்பலப்படுத்தி, அதனால் தங்கள் உயிர் போகும் சூழல் வந்தாலும் கேள்விகளில் இருந்து பின்வாங்காமல் உயிர் துறந்து, தங்கள் தியாகத்தால் இவ்வுலகில் அறியாமையை விரட்டி, அறிவியலைப் பரப்பியுள்ள அனைத்து நாத்திகர்களையும் நினைவு கூர்வதற்கான நாள் இன்று.

உலகில் 4000 மதங்கள் இருக்கின்றன வாம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று கொண்டாடப்படும் மதத் திருவிழாக் களுக்கு இவ்வுலகில் பஞ்சமில்லை. நாத்திகர் களுக்கான நாளாக ஒன்றை அடையாளம் காண்பது என்னும் நோக்கில் அமெரிக்க நாத்திக சங்கத்தினரால் 2003-ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது தான் உலக நாத்திகர் நாள்.

ஒரு புரளியைப் புறம்காணும் வகையில் தான் நாத்திகர் நாள் தொடங்கப்பட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது. எல்லா மதஙகளுக் கும் திருநாள் இருக்கிறது. மதமற்ற எங்களுக்கு எது என்று ஒரு நாத்திகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், ஏப்ரல் 1-ஆம் நாள் தான் முட்டாள்கள் தினமாயிற்றே. அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று நீதிபதி சொன்ன தாகவும் ஒரு கதையை இட்டுக் கட்டி பரப்பிய மதவாதிகள், அதை உண்மை போலவே காட்டத் தொடஙகினர். இந்தக் கட்டுகதையை ஒழிக்கும் விதமாகத் தான் அமெரிக்க நாத்திக சங்கம் மார்ச் 23-ஆம் நாளை நாத்திகர் நாளாகக் கொண்டாடத் தொடஙகியது என்கிறது அந்தத் தகவல். 2019-ஆம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள நாத்திகர்களால் இந்த நாள் ஏற்கப்பட்டதுடன், பச்சை நிறத்தில் வட்டம் வரைந்து அதனை உலக நாத்திகர் நாளுக்கான அடையாளமாகவும் ஏற்றன உலகின் பல நாத்திகர் அமைப்புகள்.

முழுமையான நாத்திகராக இல்லா விட்டாலும், கேள்வி கேள் என்ற உணர்வை எழுப்பி, அதனால் உயிர்விட்ட சாக்ரடீஸ் தொடங்கி, இன்று வரை பல்லாயிரக்கணக்கான நாத்திகர்கள் கொலை செய்யப்பட்டமை வரலாற்றுப் பதிவுகளாகும். இன்றும் பல நாடுகளில் கடும் நெருக்கடிக்கும், உயிராபத்துக்கும் உரியவர்களாக உள்ள நாத்திகர்கள் அனைவருக்கும் ஆதரவை வழங்கும் வகையிலான நாளாக உலக நாத்திகர் நாள் முன்னெடுக்கப்படுகிறது. அனைவருக்கும் நாத்திகர் நாள் வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *