தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவிப்பால் தமிழ்நாட்டிலும் கலவரம் நடத்த இருந்த பார்ப்பனர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்ட நாள் இந்நாள் – (22.03.1981)
குஜராத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் குறித்த ரானே ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. காங்கிரஸ் அரசாங்கம் உடனடியாக அந்த அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. வல்லநர்களின் ஆலோசனைக்குப் பிறகு அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது – ஆனால் அன்றைய குஜராத் காங்கிரஸ் முதலமைச்சர் சோலங்கி பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதை முற்றிலுமாக நிராகரித்தார்.
இந்த சோலங்கியின் முடிவு தேர்தல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது, மேலும் அது குறுகிய கால லாபங்களைக் கொண்டது என்ற மாநில பாஜக தலைவர் மக்ரந்த் தேசாய் “பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கம் இடஒதுக்கீடு கொள்கையை அறிவித்தது. அவர்களின் இட ஒதுக்கீடு கொள்கையை ரத்துசெய்யும் வரை நாங்கள் போராடுவோம்’’ என்று அறிவித்தார்
1981 ஆம் ஆண்டு மாநிலத்தில் இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டம் பாஜக அறிவித்தபடி நடந்தது. இப்போராட்டம் இரத்தக்களரியாக மாறி, 40 பேர் இறந்தனர் மற்றும் 100 நாட்களில் ஏராளமான சொத்துக்கள் எரிக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலர் உயர்ஜாதியினரால் தீயிட்டு உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், குஜராத்தில் நடக்கும் கோரமான படுகொலைகளை ஆதரித்து தமிழ்நாட்டிலும் பேரணி ஒன்றை22-3-1981 அன்று நடத்த தயாரானார்கள் பார்ப்பனர்களும் அவர்களது அடிவருடிகளும்,இந்த நிலையில் அவர்கள் பேரணி நடத்தும் அதே இடத்திலிருந்து எதிர் பேரணி கிளம்பி, அதே பாதையில் செல்லும் என்று போராட்ட அறிவிப்பைக் கொடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் – தடை விதித்தால் மீறப்படும் என்று போர்ச்சங்கு ஊதினார். இதனை அடுத்து பார்ப்பனக்கூட்டம் பதுங்கிக் கொண்டது.
திராவிடர் கழகம் பேரணி நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.