கூடலூர், மார்ச் 16- கம்பம் கழக மாவட்டம் கூடலூரில் 11.3.2025 அன்று மாலை ஆறுமணிக்கு தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூகநீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்தநாள் விழா – பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர். ஜனார்த்தனம் தலைமையில், மாவட்டத் தலைவர் வெ.தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் ப.செந்தில்குமார், மாவட்ட காப்பாளர் போடி ச.இரகு நாகநாதன், மாவட்ட ப.க.தலைவர் டி.பி.எஸ்.ஆர்.அரிகரன் ஆகியோர் முன்னிலையில், நகர தி.மு.க. செயலாளர் ச.லோகன்துரை ஒருங்கி ணைப்பில் எழுச்சியோடு நடைபெற்றது .
காப்பாளர் கருப்புச் சட்டை நடராசன் வர வேற்புரையாற்றினார். திராவிட மாடல் ஆட்சி யின் சாதனைக்கு எதி ரான தடைக்கல் என்ற தலைப்பில் சுழலும் சொற்போரை தேனி கிழக்குமாவட்ட திமுக செயலாளர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ந.இராமகிருட்டிணன் தொடங்கி வைத்தார்.
தந்தை பெரியாரின் அருந்தொண்டினை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பினை, ஒன்றிய பிஜேபி அரசின் சூழ்ச்சியினை விளக்கி உரையாற்றினார்.
நடுவர் -முனைவர் அதிரடிக.அன்பழகன் திமுக ஆட்சியினை, பாதுகாக்க வேண்டிய கடமையினை பல்வகை சாதனைகளை எடுத்துக் காட்டி உரையாற்றினார். உரிமைப் பறிப்பு என்ற தலைப்பில் இரா.பெரியார் செல்வன், இந்தி திணிப்பு என்ற தலைப்பில் இராம.அன்பழகன், நிதி மறுப்பு என்ற தலைப்பில் ஆரூர்.தேவ.நர்மதா ஆகியோர் போர்முழக்கமாக கருத்துக் களை பதிவு செய்தார்கள்.
பெருந்திரளாகக் கூடியிருந்த பெருமக்கள் பலத்த கரவொலியோடு வரவேற்று மகிழ்ந்தனர்.
கம்பம் நகர கழகம் சார்பில் மனோகரன், மலைச்சாமி,தேனி மாவட்டக் கழகம் சார்பில் போடி நகர செயலாளர் பொறியாளர் இர.பெரியார் லெனின், தேனி மாவட்ட ப.க.தலைவர் பெரியகுளம் மோகன் ஆகியோர் சொற்பொழிவாளர்களுக்கு பயனாடை போர்த்தி வரவேற்றனர்.
மாவட்ட இளைஞர ணித் தலைவர் முத்தமிழன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது. சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட, நகர பொறுப்பாளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.