பெரியார் மருந்தியல் கல்லூரியில் தீயணைப்பு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம்

viduthalai
1 Min Read

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் மூலம் தீயணைப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி 14.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் விதம் மற்றும் அலுவலகங்களிலோ, பொது இடங்களிலோ தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து திருச்சி மண்டல தீயணைப்புத் துறை முதுநிலை அலுவலர் பிரான்சிஸ் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறை அலுவலர் மணிகண்டன் தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்து, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *