ஆவடி, மார்ச் 15- 09.03.2025 அன்று ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் வி.சோபன் பாபு தலைமையில் நடைபெற்றது.
ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி மாவட்ட கழகச் செயலாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர். கடவுள் மறுப்புடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சு.வெங்கடேசன் வரவேற்று பேசினார். மாநில இளைஞரணித் துணைச்செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் நோக்கவுரையாற்றினார். அவர் தன நோக்கவுரையில் “சிதம்பரத்தில் 15.02.2025 அன்று கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், திராவிட மாடல் அரசிற்கு நன்றி தெரிவித்து, ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு, கழக ஆக்கப் பணி களில்இளைஞரணியினரின் பங்கு என்ன என்று விரிவாகவும், அதே நேரத்தில் விளக்கமாகவும் எடுத்து ரைத்தார்.
கூட்டத்திற்கு முன்னிலை ஏற்றிருந்த ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி மாவட்ட செயலாளர் இளவரசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட கழக, பகுத்தறிவாளர் கழக, இளைஞரணி, மகளிரணித் தோழர்கள் என அனைவரும் தங்களது கருத்துக்களையும், இளைஞரணிக்கு பேராதரவையும் தருவதாக கூறினர். கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக ஆவடி மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளார் சென்னகிருட்டிணன் நன்றி கூறினார்.
திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கியும், திராவிட மாடல் அரசிற்கு நன்றி தெரிவித்தும், ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு எதிராக களமாடும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் திருவேற்காடு, ஆவடி, திருமுல்லைவாயல், மதுரவாயல், செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்களையும் துண்டறிக்கைகளாகஅச்சிட்டுதெருமுனைப் பிரச்சாரம் நடைபெறும் பகுதியிலும், பூந்தமல்லி பகுதியிலும் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் விநியோகம் செய்யவதென தீர்மானிக்கப்பட்டது.
3. திராவிடர் கழகப் பொதுக்குழு வில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மா னங்களை விளக்கி ஒருநாள் ஆட்டோபிரச்சாரம் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
4. கொளத்தூரில் புதிதாக அமைக் கப்பட்ட அரசு மருத்துவமனைக்கு ”பெரியார்” அரசு மருத்துவமனை என பெயர் சூட்டப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.