சென்னை, ஜூலை 10 – மயிலாப்பூர் சி.எஸ்.அய். செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் 30 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக ரூ.25,05,000 (ஸ்கூட்டர் ஒன்றின் விலை ரூ.83,500/) மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட் ரோல் ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டன. இவற்றை மயிலாப்பூர் சி.எஸ்.அய். செவித்திறன் குறையுடையோருக்கான மேல் நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.