தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கப்பட்டால் தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

Viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 14 நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கப்பட்டால், வடக்கு, தெற்கு என்றும் ஹிந்தி பேசும் மாநிலங்கள், ஹிந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப் பாடு சீர்குலையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந் தகை எச்சரித்துள்ளார்.

தொகுதி
மறுசீரமைப்பு
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து சமீபத்தில் கோவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறையாது எனக் கூறினார். ஆனால், எந்தெந்த மாநிலங்களுக்கு தொகுதி கூடுகிறது என்ப தைப் பற்றி தெளிவாக கூறவில்லை.
இதன்மூலம், பாஜக, தொகுதி மறுவரையறை பிரச்சினையில் வெளிப் படைத ்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங் களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதன் காரணமாகதான், தமிழ்நாடு முதலமைச்சர் 58 கட்சிகள் அடங்கிய அனைத்துக் கட்சி கூட் டத்தை கூட்டினார். அதில், தொகுதி மறு வரையறையை இன்னும் 30 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விசயத்தில் இந்தியா கூட்டணியின் நிலை என்ன? காங்கிரசின் நிலை என்ன? என்று பா ஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்விக் கணைகளை தொடுத் துவந்தார்கள். ஆனால், நேற்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஊடக பொறுப்பாளருமான ஜெய் ராம் ரமேஷ் காங்கிரசின் நிலையை தெளிவுபடுத்தி யிருக்கிறார்.
2019-இல் மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜேமி ஹின்ட்சன் ஆகி யோர் மேற்கொண்ட ஆய்வின்படி 2026-இல் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகையின் அடிப் படையில் மாநிலங்களுக் கான இடங்கள் வரைய றுக்கப்பட்டன. இந்த ஆய்வின்படி அதிக தொகுதிகளை இழக்கும் மாநிலங்கள் தமிழ்நாடு 8, கேரளா 8, ஆந்திரா மற்றும் தெலங்கானா 8, ஒடிசா 3, மேற்கு வங்கம் 4, கருநாடகா 2, இமாச்சலப் பிரதேசம் 1, பஞ்சாப் 1 மற்றும் உத்தராகண்ட் 1 ஆகும். கூடுதல் தொகுதிகளை பெறும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம் 11, பீகார் 10, ராஜஸ்தான் 6, மத்தியபிரதேசம் 4, ஜார்க்கண்ட் 1, அரியானா 1, குஜராத் 1, டில்லி 1 மற்றும் சத்தீஸ்கர் 1 ஆகும்.

ஒருமைப்பாடு சீர்குலையும்
எனவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக் கையை கூட்டக் கூடாது. இல்லையென்றால் வடக்கு, தெற்கு என்றும், ஹிந்தி பேசுகிற மாநிலங்கள், ஹிந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும். இதை பாஜக உணரவில்லை என்றால், இந்தியாவில் ஜனநாயகத்துக்கு பேரழிவு ஏற்படும். 75 ஆண்டுகளாக அரசமைப்புச் சட்டம், நீதிமன்றங்களின் மூலமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றிய, மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். இவ்வாறு அவர் எச்சரித் துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *