சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் மிக உயரத்தில் இந்த தந்தைப் பெரியார் சிலை இருக்கிறது. ஆனால் ஏணி வசதி இல்லாததால் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் போன்ற நிகழ்வுகளின் போது மாலை அணிவிக்க இயலவில்லை.
அரசு ஊழியர்கள் தற்காலிக மர ஏணியை பயன்படுத்தி அரசு சார்பான மாலையை அணிவிக்கிறார்கள். அது எப்போதேனும் உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். கடந்த முறை அந்த மர ஏணியை பயன்படுத்தி மாலை அணிவித்தவன் என்கிற முறையில் இதை உணர்ந்து சொல்கிறேன்.
ஆகவே இந்த பெரியார் சிலைக்கு இரும்பு படிக்கட்டு ஏணி வசதி செய்து தருமாறு தமிழ்நாடு அரசை தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.
– பெரியார் யுவராஜ்
தென்சென்னை இளைஞரணி மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்.