ஜெயங்கொண்டம், மார்ச்8- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் 1.3.2025 அன்று மாலை ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் விடுதலை.நீலமேகன் அனைவரையும் வரவேற்க, தலைமை செயற்குழு உறுப்பினர் க சிந்தனைச் செல்வன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் காப்பாளர்கள் சி. காமராஜ், சு.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி திராவிடப் பேரினத்தை உயர்த்தும் குறிக்கோளோடு சிறப்பாக செயல்பட்டு வருவதை பாராட்டியும், தமிழையும் தமிழ்நாட்டையும் காக்கும் பெரும் கவசமாக திகழ்வதையும், அரிய தலைமைப்பண்போடு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கினையும் விளக்கி சிறப்புரையாற்றினார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயராமன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் இரத்தின ராமச்சந் திரன், மாவட்ட துணைச் செயலாளர் க.கார்த்திக், மாவட்ட விவசாய அணி தலைவர் மா .சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ. இளவழகன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெ. இளவரசன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா. கருணாநிதி, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், அமைப்பாளர் கோ. பாண்டியன், நகர செயலாளர் டி.எஸ்.கே. அண்ணாமலை, தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி இராமச்சந்திரன் ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம், அமைப்பாளர் சி.தமிழ் சேகரன், சூரிய நாராயணன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா செல்வகுமார், ரஜினிகாந்த், சி.கருப்புசாமி, க.சுப்பராயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ. தமிழரசன், மணப்பத்தூர் கலைமணி, அரியலூர் ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, நகர செயலாளர் ஆட்டோ தர்மா, வடலூர் இந்திரஜித் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.