கிராமங்கள் முதல் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கழக பிரச்சார கூட்டங்கள் நடத்த முடிவு திருச்சி மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்

viduthalai
2 Min Read

திருச்சி, மார்ச் 8- திருச்சி பெரியார் மாளிகையில் 07-03-2025 அன்று நடைபெற்ற திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில பல்கலைக் கழக மாணவர் கழக அமைப் பாளர் ஆ. அறிவுச்சுடர் வரவேற் புரை ஆற்றினார்.

திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமை வகித்து உரையாற்றினார்

மாவட்ட செயலாளர் மகாமணி,பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கிலி முத்து, கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கழக செயல்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.

பெல் தி. தொ.க செயலாளர் ஆண்டிராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரவீன்,மாநகர தலைவர் ராமதாஸ்,மகளிரணி தலைவர் ரெஜினா பால் ராஜ், மகளிரணி மாவட்ட செயலாளர் சாந்தி,ஜெயில் பேட்டை வசந்தி,மகளிரணி பேபி,பெல் தி.தொ.க தலைவர் அசோக்குமார், மாணவர் வழக தோழர் சபரி,மணப்பாறை ஒன்றிய செயலாளர் அசோக், மணப்பாறை ஒன்றிய தலைவர் பாலமுருகன், மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, மாவட்ட செயலாளர் சு. மகாமணி, விடுதலை கிருஷ்ணன் ஆகி யோர் உரையாற்றினர்.

03-02-2025 அன்று மறைந்த திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், 04-03-2025 மறைந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் நந்தலாலா, 07-03-2025. மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மகாலிங்கத்தின் துணைவியார் திராவிட மணி, மார்க்கெட் பகுதி சின்னமுத்துஆகியோரின் மறைவுக்கு இந்த கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
15-02-2025 அன்று சிதம்பரத் தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு திருச்சி மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என முடிவு செய்யப் படுகிறது

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர பெரியார் சிலையுடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு திருச்சி மாவட்டத்தின் சார்பாக பெருமளவில் நிதி வசூல் செய்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சாரக் கூட்டங்களை பரவலாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மேற்கொள்ளும் ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு, பண்பாட்டு பாதுகாப்பு பரப்புரை பயண வரவேற்பு பொதுக்கூட்டத்தை மே 2 அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மிக எழுச்சி யுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *