ஜெயங்கொண்டம், மார்ச்8- மதுரை இலக்கிய மன்றம் சிறீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளை மதுரை மற்றும் Y.M.C.A. MADRAS INTERNATIONAL இணைந்து வழங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் படையில் முப்படை பயிற்று ஆசிரியர்களுக்கு வீரமாராயம் விருது 28.2.2025 அன்று சென்னை வேப்பேரியில் உள்ள Y.M.C.A. உள்அரங்கில் நடை பெற்றது.
இந்த விருது பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணியோடு மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்றையும், நல்லொழுக்கத்தையும் வளர்த்திட பணியாற்றி வரும் தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்கு சங்க காலத்தில் ஆகச் சிறந்த போர்படை தளப திக்கு வழங்கப்பட்ட ‘வீரமாராயம்’ எனும் பட்டத்தை அடிப் படையாகக் கொண்டு ‘வீர மாராயம்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதில் ஜெயங்கொண் டம் பெரியார் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த அசோசியேட் N.C.C. ஆபீஸர் கே.ராஜேஷ் அவர் களுக்கு இந்த வீரமராயம் விருதினை சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணனால் வழங்கப்பட்டது. பின்பு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி முதல்வர் ஆர்.கீதா அவர்களால் காலை கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டார். இதனை நமது பள்ளி யின் தாளாளர் வீ.அன்பு ராஜ் அவர்களும், கே.ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டினை தெரிவித் தார்.