புதியக் கிளை கழகங்களை துவங்குவது – தெருமுனைக் கூட்டங்களை மாவட்டம் முழுவதும் நடத்துவது என துறையூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

துறையூர், மார்ச் 7- துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 5.3.2025 மாலை 7 மணிக்கு துறையூர் ஹோட்டல் ஜான் மீட்டிங் ஹாலில் துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கழக தலைவர் ச.மணிவண் ணன் தலைமை தாங்கினார். மாநில ப.க. அமைப்பாளர் அ.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை. இரா. ஜெயக்குமார் சிதம்பரம் பொதுக்குழு தீர்மானம் கிளைக் கழகங்கள் அமைத்தல். சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குதல். விடுதலை நாளிதழுக்கு சந்தாக்கள் வழங்குதல் ஆகியவை உள்ளிட்ட கழக வளர்ச்சி பற்றி விளக்கமாக உரையாற்றினார். புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் பெ பாலகிருஷ்ணன். இரா. நந்தகுமார் ஆகியோருக்கு பயனாடை அணிவித்தார்.தஞ்சை இரா. ஜெயக்குமாருக்கு மாவட்ட தலைவர் பயனாடை அணிவித்தார். இறுதியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார் நன்றியுரை கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி. துறையூர் ஒன்றிய தலைவர் இர.வரதராஜன்.மாவட்ட ப. க. தலைவர் பாஸ்கர். மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ். மாவட்ட ப. க. துணை தலைவர் எஸ். என். புதூர். கருணாகரன். உப்பிலியபுரம் ஒன்றிய ப. க. தலைவர். மாராடி. எம். ஏ. இ ரமேஷ். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண் ராஜ். மாவட்ட மாணவர் கழக தலைவர் ரெ. தன்ராஜ். துறையூர் நகர செயலாளர் ந.இளையராஜா. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கண்ணனூர் ப. குணாள். நகர் ப. க. அமைப்பாளர் வழக்குரைஞர். அ. தமிழ்செல்வன். ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *