சென்னை, மார்ச் 7 மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போது உள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்து வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது;-
மக்காச்சோளம்
“தமிழ்நாட்டில் மக்காச் சோளப்பயிர் சராசரியாக 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 29 லட்சம் மெட்ரிக் டன் மக்காச் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச் சோளம் பெரும்பாலும் தீவனத்தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது எத்தனால் உற்பத்தி தொழிற் சாலைகளில் மூலப் பொருளாக அதன் தேவை பெரிதும் அதிகரித் துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசால் மக்காச்சோள சாகுபடி பெருமளவில் விவசாயிகளி டையே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி வேளாண் விளைபொருளான மக்காச்சோளத்திற்கு கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய 7 விற்பனைக்குழுக்களின் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வசூ லிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்காச் சோளத்தின் தேவையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பெரும் பாலான மாவட்டங்களில் மக்காச் சோள சாகுபடி மேற் கொள்ளப்பட்டு பரப்பு அதிகரித்து உற்பத்தி உயர்ந்ததை ஒட்டி மக்காச்சோள விற் பனையை முறைப்படுத்திட வேண்டுமென்பதற்காக பெரம்பலூர், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கடலூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விருதுநகர், நாமக்கல், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் அரியலூர் ஆகிய 16 விற்பனைக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள 161 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு உட்பட்ட பகுதிகள் 1987-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் பிரிவு 9(1)(d)-ன் படி வேளாண் விளைபொருளான மக்காச் சோளம் அறிவிக்கை செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிதழ் எண்.1 நாள்:01.01.2025-ல் வெளியிடப்பட்டது. இதன்படி இப்பகுதிகளில் மக்காச்சோள வர்த்தகத் திற்கு ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வசூலிக் கப்பட்டு வந்தது.
ரத்து
இதனைத்தொடர்ந்து விவசாயிகள், வியா பாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கருத்துகளை ஆராய்ந்து அதற்கேற்ப 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் பிரிவு 9(1)(d)-இன் படி வெளியிடப்பட்ட வேளாண் விளை பொருளான மக்காச்சோ ளத்திற்கான அறிவிக்கை தமிழ்நாட்டின் அனைத்து விற்பனைக்குழு பகுதி களிலும் ரத்து செய்யப் படுகிறது. இதற்கான அரசிதழ் விரைவில் வெளி யிடப்படும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.