தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் பெரிதும் குறைந்துள்ளன காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 7 தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக வும், ரவுடிகளின் அட்டூழியம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வும் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாட்டில் குற்றச்செயல் களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், குற்றச் செயல் களின் எண்ணிக்கை குறைந் துள்ளது. அந்த வகையில் 2023-இல் ஆதாயக் கொலைகள் 83 ஆக இருந்த நிலையில், 2024-இல் இது 75 ஆக (10%) குறைந்துள்ளது.

கொள்ளை 2023-அய் விட (133), 2024-இல் (110) குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் திருட்டு வழக்குகள் 10.65 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2023-இல் 17,788 ஆக இருந்த திருட்டு, 2024-இல் 15,892 ஆகக் குறைந்துள்ளது.

மேலும், 2023-இல் கொலை, கொலை முயற்சி, கொலையாகாத மரணம் உள்ளிட்ட வகை களில் 49,286 வழக்குகள் பதி வாகி இருந்தன. அதே நேரத் தில் இந்த வழக்குகள் 2024-இல் 31,497ஆக உள்ளன. இதனால், 2023-அய் ஒப்பிடுகை யில் 2024-இல் 17,789 வழக்குகள் (36.12 சதவீதம்) குறைந்துள்ளன.

இதேபோல் 2023-ல் 110 ஆக இருந்த கொலை வழக்குகள் குறைந்தன. இது 2023-ஐ ஒப் பிடும்போது 2024-ல் 47 வழக்கு கள் அதாவது 47.72 சதவீதம் குறைவாகும். இதேபோல் 2023- 3,694, 2024- 4,572 விரோதிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கலவர வழக்குகளும் 5.8 சதவீதம் (2023-ல் 1,305, 2024- 1,229) ( துள்ளன.

தமிழ்நாடு காவல் துறையின் முன்னெச்சரிக்கை மற்றும் ரவுடிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை காரணமாக 2024-ஆம் ஆண்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதி ரான குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. குறிப்பாக கொலை மற்றும் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 80 ஆயிரம் அரசுப் பணியிடங்களை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு

வாசிங்டன், மார்ச் 7 அமெரிக்காவில் 80,000 அரசுப் பணியிடங்களை ரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் ‘அரசு செயல் திறன்’ (டிஓடிஜி) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் பதவி வகிக்கிறார்.

டிஓடிஜி துறையின் பரிந்துரைகளின்படி அமெரிக்க அரசின் செலவினங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான துறையில் 80,000 அரசுப் பணியிடங்களை ரத்து செய்ய அதிபர் ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த துறையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த துறைக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதிபர் ட்ரம்பின் முடிவுகள் குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *